Monday

எப்படி பெற்ற தாய் மீது சிறு துளி பாசம் ஒட்டிக்கொண்டிருக்குமோ..அதைப் போல தாய்மொழி மீது ஒரு பிடிப்பு இருக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான்...எல்லா நாட்டிலும் அந்தந்த மொழிக்கென்று ஒரு அங்கீகாரம் இன்றும் இருந்து வருகிறது.அமெரிக்கன் ப்ரென்ச் கற்றால் கூட ஆங்கிலம் தனது முதுகெலும்பு என்பதை அவன் மறப்பதில்லை.ஆனால் இங்கு நிலையோ தலைகீழ்...தமிழ் வழியில் கற்பது தலைக்குனிவு என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது..இதை மறுப்பவர் எவரெனும் உண்டா...?கடந்த 5 ஆண்டு கணக்கெடுப்பு சொல்கிறது..தமிழ் வழிக் கல்வி சேர்க்கைவீதம் வேகமாக குறைந்து வருகிறது..10ஆங்கில வழி பள்ளிகள் புதிதாக தொடங்கப்படும் நேரத்தில் 20 தமிழ் வழிப் பள்ளிகள் மூடப்படுகிறது..இன்று நம் சந்ததியினரில் பலருக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியாது...இன்றே இப்படி என்றால் நாளை........?என் தாத்தாவுக்கு தமிழ் இலக்கியம் எழுதத் தெரியும்என் அப்பாவுக்கு தமிழ் இலக்கியம் படிக்கத் தெரியும்எனக்கு தமிழில் பேசத் தெரியும்..நாளைஎன் பையனுக்கு தமிழ் என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்க மட்டுமே தெரியும்...நாளைய பொழுதுக்கான உணவை எறும்பு இன்றே சேமிக்கிறது..ஒரு எறும்புக்கு நாளைய வாழ்வின் பொருள் புரிந்திருக்கிறது..ஆனால் நமக்கு.....?சற்றே சிந்திப்போம்....

புதிய ஆத்தி சூடி

அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.
ஈகை திறன்.
உடலினை உறுதிசெய்.
5 ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம்.
10 ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
15 கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலும் துணிந்துநில்.
20 கைத்தொழில் போற்று.
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டு வாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள்.
25 சாவதற்கு அஞ்சேல்.
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று.
30 செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ்.
35 சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வத தருளின்.
40 ஞேயங் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
45 துன்பம் மறந்திடு.
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என்றுணர்.
தேசத்தைக் காத்தல்செய்.
தையலை உயர்வு செய்.
50 தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய்.
55 நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்நெற்றி சுருக்கிடேல்.
60நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
65 பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல்.
70பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
75மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல்.
80மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
85யவனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
90ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர்.
95ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ்.
100(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு.
105வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.வேதம்
புதுமைசெய்.
வையத் தலைமைகொள்வௌவுதல் நீக்கு.