Monday

எப்படி பெற்ற தாய் மீது சிறு துளி பாசம் ஒட்டிக்கொண்டிருக்குமோ..அதைப் போல தாய்மொழி மீது ஒரு பிடிப்பு இருக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான்...எல்லா நாட்டிலும் அந்தந்த மொழிக்கென்று ஒரு அங்கீகாரம் இன்றும் இருந்து வருகிறது.அமெரிக்கன் ப்ரென்ச் கற்றால் கூட ஆங்கிலம் தனது முதுகெலும்பு என்பதை அவன் மறப்பதில்லை.ஆனால் இங்கு நிலையோ தலைகீழ்...தமிழ் வழியில் கற்பது தலைக்குனிவு என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது..இதை மறுப்பவர் எவரெனும் உண்டா...?கடந்த 5 ஆண்டு கணக்கெடுப்பு சொல்கிறது..தமிழ் வழிக் கல்வி சேர்க்கைவீதம் வேகமாக குறைந்து வருகிறது..10ஆங்கில வழி பள்ளிகள் புதிதாக தொடங்கப்படும் நேரத்தில் 20 தமிழ் வழிப் பள்ளிகள் மூடப்படுகிறது..இன்று நம் சந்ததியினரில் பலருக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியாது...இன்றே இப்படி என்றால் நாளை........?என் தாத்தாவுக்கு தமிழ் இலக்கியம் எழுதத் தெரியும்என் அப்பாவுக்கு தமிழ் இலக்கியம் படிக்கத் தெரியும்எனக்கு தமிழில் பேசத் தெரியும்..நாளைஎன் பையனுக்கு தமிழ் என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்க மட்டுமே தெரியும்...நாளைய பொழுதுக்கான உணவை எறும்பு இன்றே சேமிக்கிறது..ஒரு எறும்புக்கு நாளைய வாழ்வின் பொருள் புரிந்திருக்கிறது..ஆனால் நமக்கு.....?சற்றே சிந்திப்போம்....

No comments: