Thursday

நோயாளிக்கு ஒரு அட்வைஸ்

நோயாளிக்கு ஒரு அட்வைஸ் இன்னைக்கு இருக்கிற நிலைமையில் யார்ற்கு என்ன நோய் வரும் என்பது யார்க்கும் தெரியாது .
ஒரு தலைவலி வந்தா யாராவதுகிட்ட சொன்ன போதும் அட இந்த வயசில் ஏப்படி உனக்கு மட்டும் தலைவலி வருது என்னக்கு பொறு ஒண்ணுமில்லை 
அட உனக்கு மட்டும் ஏப்படி பல்வலி வருது  உனக்கு மட்டும் ஏப்படி சளி பிடிக்குது 
உனக்கு மட்டும் ஏப்படி சுகர் வருது அட பாவிகளா நோய் என்பது ஒவொரு உடம்புக்கு த்க்குந்தபடி வரும் இதல்லாம்  ஜீன்ஸ் (மரபணு )பண்ற வேலை அவன் உணவு சார்ந்த பழக்கம் இன்னும் நிறைய இருக்கு .

Friday

History of Telescope

தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது. 1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர்களும் இதன் வழி வந்தன.

18-ம் நூற்றாண்டில், கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர். நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார்.

கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார்.

ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார். இதே காலகட்டத்தில், பிரிட்டடிஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் “மைக்ரோகிராபியா” என்ற நூலை வெளியிட்டார்.

அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

MicrosoftOffice Vs Google Docs

ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

Wednesday

ஒரு யோகியவனை பற்றி !!!!!!!!!!!!!!!!!!!!1

கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர். 
நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், நிறைய வாசிக்க வேண்டும் என்ற அறிவுத் தேடலையும் குற்றமாக எந்த மனிதனாலும் கூற முடியாது. அந்த ஆர்வமே அப்பெண்ணிடம் மிகுதியாய் இருந்திருக்கிறது என்பதை அவருடன் பேசியதில் இருந்து உணர முடிகிறது. அப்படி இருக்க அவர் சந்தித்த பிரச்சனைதான் என்ன?

Thursday

விண்டோஸ் 8

தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.

தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.

இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.

Monday

சாணக்கியர்


கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

Thursday

சூரிய ஒளி மின் உற்பத்தி

பதவியேற்ற 10 நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் வரவேற்க தக்க ஒன்று. சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து பரிசீலித்து வரும் தமிழக அரசு இதற்காக தனிக் கொள்கையை வகுக்கும் நேரம் வந்து விட்டது.
சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் என்பதால், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து அளவிலும் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த முடியும். அனல், அணு, நீர், காற்றாலை என்று எந்த மின் திட்டமானாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் மின் உற்பத்தி செய்ய முடியும். மின் தேவையோ பரவலாக இருக்கிறது. மின் வினியோகத்தின் போது, தற்போது ஏற்படும் 19 சதவீத மின் இழப்பை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களை மேம்படுத்தாமல், பயன்படுத்தி கொள்ளவும் சூரிய ஒளி மின் திட்டங்கள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்தும் 3-5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தனியார் முதலீட்டுடன் 25 ஏக்கர் நிலம் போதும். ஒரு மெகா வாட்டிற்கு சுமார் 13 முதல் 14 கோடி வரை முதலீடு தேவைப்படும். இது வேறு எந்த திட்டத்திலும் இயலாத காரியம் சூரிய ஒளிமின் திட்டம். ஒரு ஆண்டுக்குள் நிறுவ முடியும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தை கண்டிப்புடன் அமல் செய்து மக்களிடம் நற்பெயர் வாங்கிய முதல்வர் ஜெயலலிதாவால் தான் இதுபோன்ற சூரிய ஒளி மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். மின் உற்பத்தியை மின் தொகுப்புக்கு (கிரிட்) அனுப்பும் இத்திட்டம் தவிர, மின் தொகுப்புக்கு அனுப்பாமல் நான் கிரிட் முறையும் உள்ளது. (ரூப் டாப் மாடல்) ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள சுமார் 5000 வீடுகளில் 2 முதல் 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 100 சதுர அடி இடம் இருந்தால் போதும். ஒரு கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ. 2 லட்சம் செலவாகும். 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய மொத்தம் ரூ. 6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு மரபுசாரா மின் உற்பத்தி கழகம் (TEDA) 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. ஆகவே முதலீட்டாளருக்கு ரூ.4.20 லட்சம் செலவாகும். மீதமுள்ள தொகையில் 5 சதவீதம் வட்டியுடன் தமிழ்நாடு பவர் பினான்சியல் கார்ப்பரேஷன் கடன் வழங்கினால் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரிக்கும்.

முதலீட்டை ஈடு கட்ட: சூரிய ஒளியில் முதலீடு செய்யும் தனி நிறுவனத்துக்கோ, வீட்டுக்கோ, அமைப்புக்கோ அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு சரிபங்காக, அவர்கள் அரசுக்கு செலுத்தும் பலவித வரிகளில் உதாரணமாக சொத்து வரி, கார்ப்பரேஷன் வரி, தொழில் வரி, விற்பனை வரி, வாட் வரி ஆகியவற்றில் 6 ஆண்டில் தாங்கள் செய்த முதலீட்டை ஈடுகட்ட செய்யும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தால் இதில் முதலீடு செய்ய பலர் முன்வருவார்கள். 6 ஆண்டுகளுக்கு பின் மீதமுள்ள 19 ஆண்டுகளில் (சூரிய ஒளி மின் சாதனங்கள் 25 ஆண்டுகள் உற்பத்தி தரும்). 3 கி.வா. மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்ற நிலை உருவானால் இதில் முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள். அரசுக்கு இந்த முதலீட்டை சலுகை என்று நினைக்காமல் அரசுக்கு பதில் முதலீட்டை தனியார் செய்தார்கள் என்று எண்ணி, 6 ஆண்டுகளில் பணத்தை திருப்பி செலுத்துகிறோம் என்று கருத வேண்டும். பல வெளிநாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. மாநிலத்தின் பத்து வெவ்வேறு இடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்களை (சோலார் பார்க்) அமைக்க மாநில அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் 300 மெ.வா. மின் உற்பத்திக்கும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு முதலீட்டாளருக்கு 1 மெ.வா., முதல் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கும் திட்டமாக இருந்தால், இத்திட்டம் வெற்றிகரமாக அமையும். ஒரே இடத்தில் பல முதலீட்டாளர்கள் இந்த பூங்காக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். அதே நேரத்தில் ஒரே இடத்தில் 300 மெ.வா., சோலார் பூங்கா அமைக்க நேரிட்டால் அரசுக்கும், துணை மின் நிலையங்கள், உயர் மின் அழுத்த வினியோகம் செய்ய குறைந்தது 1500 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இவ்வாறு சோலார் பார்க்கை முதல் கட்டமாக வைத்து கொள்ளாமல் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஒன்று முதல் மூன்று மெ.வா., சிறு திட்டங்களை தமிழகத்தில் உள்ள குறைந்தது 250 பஞ்சாயத்துக்களில் நடைமுறை படுத்த ஆவன செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது . அரசு ஏற்படுத்தும் சோலார் கொள்கையும், அந்த கொள்கையில் ஏற்படுத்தும் நம்பிக்கையும் தான், முதலீட்டாளர்களை தமிழகத்தில் சோலார் மின் நிலையங்களை துவக்க ஈர்க்கும்.

குஜராத் கொள்கை: ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷன் திட்டத்தை அடுத்து, குஜராத் தனக்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்கையை அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அங்குள்ள அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.15 வீதம் 12 ஆண்டுகளுக்கு பெற்று கொள்ளவும், மீதமுள்ள 13 ஆண்டுகளுக்கு ரூ.12 வீதமும் பெற்றுக்கொள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. திட்டத்துக்கான நிலத்துக்கு பதிவுக் கட்டணம், வரி ஆகியவற்றில் குஜராத் அரசு சலுகையும் அளிக்கிறது. நிலம் கையகப்படுத்துவது முதல் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான அனைத்து துறைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து ஏற்படும் பிரச்னைகளை களைய அதிகாரி நியமிக்க படுகிறார். உயர் அதிகாரி தலைமையில் ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் அளிக்கும் முறையையும் அந்த அரசு கடைப்பிடிக்கிறது.

குஜராத்தில் இந்த வெற்றி பார்முலாவை தொடர்ந்து, ராஜஸ்தான், அரியானா, மேற்கு வங்கம், டில்லி, மகாராஷ்ட்ரா, ஒடிசா, ஆகிய மாநிலங்கள் தனிக் கொள்கையை வகுத்துள்ளன. இருந்தும் குஜராத் போல், இந்த மாநிலங்களில் அதிக அளவு சோலார் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதற்கு காரணம் குஜராத் போல் அதே விலைக்கு சோலார் மின்சாரத்தை வாங்கிய போதிலும், குஜராத் போல் அதிகாரிகள் மட்டத்தில், ஒத்துழைப்பு இருக்காது. என்ற நம்பிக்கையும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பிரச்னையாலும் சில மாநிலங்களில் கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னையாலும், தங்கள் முதலீட்டை குஜராத்தில் அதிகப்படுத்துகிறார்களே தவிர, இந்த மாநிலங்களில் போக வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு வேலை தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தியை கூடுதல் விலையில் வாங்குவார்கள் என்று திட்டம் வகுத்து கொடுத்தால் மட்டுமே தமிழகத்தின் பக்கம், இவர்களை ஈர்க்க முடியும்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு: தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு பிரசித்தி பெற்றது. இவர்களால் ஒரு போதும் குஜராத் அதிகாரிகள் போல் தொழில் செய்ய வருபவர்களுக்கு ஓத்துழைப்பு கொடுக்க முன் வரமாட்டார்கள். இதை ஈடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு குஜராத்தை விட அதிக சலுகை வழங்கினால் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறும். மின் துறையில் உள்ள பல அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி என்றாலே ஒரு நம்பிக்கை இல்லாத, முடியாத ஒரு திட்டமாக கருதுகிறார்கள். சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.15 செலவாகும் என்பது தான் இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம். மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து யூனிட்டுக்கு ரூ.13 வரை கொடுத்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகிறது. சில சமயங்களில் டீசல் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.12 வரை விலை கொடுத்து வாங்குகிறது. இப்படியிருந்தும் சூரிய ஒளி ரூ.15 கொடுக்க வேண்டுமே என்று அதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர ஒரு மெகா வாட்டுக்கு 14 கோடி முதலீடு செய்ய தனியார் முன் வருகிறார்களே என்று நினைப்பதில்லை. அரசு செய்ய வேண்டிய முதலீட்டுக்கு பதில் தனியார் செய்ய முற்படும்போது அதை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைப்பதில்லை. முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி, அரசு அதிகாரிகளின் தலையீடே இல்லாமல் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தாலே அரசு நினைக்கும் பல அடிப்படை திட்டங்கள் வெற்றிகரமாக முடியும்.

அதிகாரிகளின் நிலை: ஆற்காடுவீராசாமி அமைச்சகத்தின் கீழ் இருந்த சில அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாததும், நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாததும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் தான் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை இவ்வளவு மோசமாக இருந்தது. இதுவே கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட மிக பெரிய கெட்ட பெயராகும். சூரிய மின் திட்டத்தின் மூலம் ஒரு மெகா வாட்டிற்கு 14 கோடி தேவைப்படுவதால் இதை தயாரிக்க ஒரு யூனிட்டிற்கு ரூ.12 ஆகும். தனியாரிடமிருந்து இதை பெறும்போது, அவர்கள் ரூ.15 க்கு குறையாமல் விற்பார்கள். அதனால் அரசு மானியம் இல்லாமல் சூரிய மின் ஒளி திட்டம் நிறைவேற்ற முடியாது. அனல் மின் நிலையத்திற்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 5 கோடி தான் ஆகும் என்று கூறும் அதிகாரிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அனல் மின் நிலையம் குறைந்தது 1000 முதல் 3000 மெகா வாட் நிலையமாக தான் இருக்க முடியும். இது போக திட்டத்தில் வராத செலவாக அனல்மின் நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு (Sub Station) மற்றும் மின் விநியோகம்) ஒரு மெகாவாட் 5 கோடி செலவு ஏற்படும். இதை திட்ட செலவில் சோர்க்காமல், அரசு பட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது. இதனாலே அனல்மின் நிலையம் அமைக்க வெறும் 5 கோடி ரூபாய் தான் ஆகும் இவர்கள், மேலும் அரசு செய்யும் செலவை சேர்க்காமல் அனல்மின் நிலையம் மூலம் பெறப்படும் ஒரு யூனிட்டிற்கு ரூ.3 க்கு குறைவாக கிடைக்கும் என்று அரசை நம்ப வைக்கிறார்கள்.

எப்படி செயல்படுத்துவது: சூரிய ஒளி மின் திட்டத்தை அமல் செய்ய, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓர் அதிகாரியை தமிழ் அரசு நியமிக்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை பெற வேண்டியிருப்பதாலும் அத்துறையினரின் ஈடுபாடும் உதவியும் தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு அஞ்சியே முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆகவே, தலைமைச் செயலர் அளவிலான அந்தஸ்தில் இருந்தால் தான் மற்ற துறை செயலர்கள் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட முடியும். இது வளரும் தொழில்நுட்பம் கொண்ட துறை என்பதால் இத்துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலரை உறுப்பினராகவும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கிராம ராஜ்யமே ராம ராஜ்யம்: கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்த்தால், கிராம மக்கள் நகரங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். நகர வளர்ச்சி மற்றும் நெருக்கடி தீர்க்க அரசு செய்யும் செலவு கோடிக்கணக்கில் குறையும். கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லை. இருந்தாலும் தாழ்வழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளை காக்கும் இன்குபேட்டர், அறுவை சிகிச்சை அறைகளுக்கு போதுமான மின்சாரம் இல்லை. உயிர்காக்கும் கருவிகளை இயக்கவும் மின்சாரம் இல்லை. விதைகளை பாதுகாக்க, உற்பத்தி செய்த காய்கறி பழங்களை காப்பாற்றவும், கால்நடை இனவிருத்திக் கூடங்களை இயக்கவும் மின்சாரம் இல்லை. இந்நிலை மாற ஒவ்வொரு பஞ்சாயத்தும் 2 மெ.வா., மின்சாரத்தை நிறுவி அவர்களே மின்வினியோகம் செய்யும் முறைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. 2003ம் ஆண்டு மின்சார உற்பத்திச் சட்டத்திலும் இதற்கான வழிமுறை இடம்பெற்றுள்ளது.

பஞ்சாயத்து மட்டத்திலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதற்காக சோலார் தொழிலில் ஈடுபட்டு வரும் Wipro, Tata BP, Moserbaer உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்தினால், அவர்களே இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி சோலார் மின்சார திட்டத்தை நிறுவி அதனை விநியோகித்தும் செயல்படுத்தியும் கொடுப்பார்கள். அரசு இதற்கு உத்தரவும், தனிக்கொள்கையும் ஏற்படுத்தி கொடுத்தால் போதும். 3 ஆண்டுகளில் குறைந்தது 200 பஞ்சாயத்துகளில் 2 மெ.வா., திட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு திடமான எண்ணமும், சரியான திட்டமும் நடைமுறைப்படுத்தும் வைராக்கியமும் நேர்மையான அதிகாரிகளும் இருந்தால் போதுமானது.

தேசிய சோலார் மிஷன் தமிழகத்தின் பொறுப்பு என்ன?: கடந்த 2009 நவம்பரில், தேசிய சோலார் மிஷன் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக 2010-13 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. 2010ல் துவங்கும் முதல் கட்டத்தை இரண்டாக பிரித்து, 30 நிறுவனங்களுக்கு 150 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் தூத்துக்குடியில் 5 மெ.வா., மின் உற்பத்திக்கு ஒரு தனியார் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
இக்கொள்கையின் படி, தேசிய அனல்மின் உற்பத்திக்கழக வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.டி.பி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிட்.,) எனும் அமைப்பு தான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல்படுகிறது.

இந்த அமைப்புதான் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 17.91 விலை கொடுத்து, இருபத்தைந்து ஆண்டு கால ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும். தற்போது மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், தேசிய சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பொறுப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை.

தேசிய சேலார் மிஷன் திட்டப்படி, சூரிய ஒளி மின்உற்பத்தி செய்யும் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 17.91 வீதம் மின்சாரத்தைப் பெற்று, என்.டி.பி.சி., தன்னிடம் உள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாத மத்திய தொகுப்பிலிருந்து 3 மடங்கு மின்சாரத்தைச் சேர்த்து மாநிலங்களுக்கு திருப்பி வழங்கும். உதாரணமாக ஒரு சூரிய ஒளி மின்திட்டத்தில் 1000 யூனிட் மின் உற்பத்தியானால், 3000 யூனிட் சேர்த்து, 4 ஆயிரம் யூனிட்டாக மாநிலத்திற்கு திருப்பி வழங்கும். இதனால் மாநிலங்கள் பெறும் மின் உற்பத்திக்கு ரூ. 5.50 வீதம் என்.வி.வி.என்.,க்கு செலுத்தினாலே போதும். இதன் மூலம் தேசிய அனல் மின்கழக நிறுவனத்துக்கு (என்.டி.பி.சி.,) ஏற்படும் நஷ்டம் மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சமாளித்து கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட சதவீதம்: ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபுசாரா மின்சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் அப்ளிகேஷன்) என்று பெயர். காற்றாலை மின் உற்பத்தியால் இந்த இலக்கை தமிழகம் எளிதில் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி குறிப்பிட்ட சதவீதம் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தனி ஆர்.பி.ஓ., தேசிய சோலார் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஓ.,வை கடைபிடிக்காத மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் மின்வினியோகம் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசு குறைத்து விடும் அபாயம் உள்ளது.

அதன்படி, 2010 முதல் ஒரு மாநிலம் பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தில் 0.25 சதவீதம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து 2022ல் இதன் மொத்த உற்பத்தி 3 சதவீதமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மில்லியன் யூனிட்டுகள் செலவானது. இதில் 0.25 சதவீதத்தை கணக்கிட்டால் 100 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சிவகங்கையில் மோசர் பெயர் நிறுவனம் மத்திய அரசின் பழைய திட்டத்தின் படி, 5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தியை மட்டுமே துவக்கி உள்ளது.

தேசிய சோலார் மிஷன் திட்டப்படி, 2010-11 ஆண்டில் இரண்டாவது கட்டத்தில் 500 மெ.வா., திட்டங்களுக்கு இந்த ஜூன் மாதம் மத்திய அரசு டெண்டர் விட உத்தேசித்துள்ளது. இது போக சிறு முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில், ஆர்.பி.எஸ்., எஸ்.ஜி.பி., எனும் மற்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 7 நிறுவனங்கள் தேர்வாகின. அடுத்த மார்ச் மாதத்துக்குள் உற்பத்தி துவக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் சூரிய ஒளி மின்உற்பத்தி: கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் அவர்கள் உபயோகிக்கும் மின்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். 2 ஆண்டுகளில் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள், திருமண மண்டபங்கள், கம்யூனிட்டி ஹால்கள், கிளப்புகள் என்று இத்திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம்.

தமிழகத்தில் 600 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவை குறைந்தபட்சம் 500 கி.வா., முதல் 1000 கி.வா., வரை மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. குறைந்தது 100 கி.வா., சோலார் மின் உற்பத்தியை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும். இதற்கு அவர்கள் ஒன்றரைக்கோடி வரை முதலீடு செய் வேண்டும். இதனால் 60 மெ.வா., மின்உற்பத்தியை இன்ஜினியரிங் கல்லூரிகள் வழியாக உற்பத்தி செய்ய முடியும். இன்ஜினியரிங் கல்லூரிகள் கிராமப்பகுதியில் அதிகம் இருப்பதால் இடப்பற்றாக்குறை என்ற பிரச்னை இல்லை.

பயோ கேஸ்: 500 பேருக்கும் மேல் சாப்பிடும் கேன்டீன்கள் ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் சமையலுக்கென அதிக மின்சாரம் செலவாகிறது. இதற்கு இந்த சமையல் கூடங்களில் சூரிய ஒளி மூலம் தான் வெந்நீர் உற்பத்தி செய்ய வேண்டும். அதேபோல், உணவுக்கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்திக்கான திட்டத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு உத்தரவிடவேண்டும். சில மாநிலங்கள் இம்முறையை பின்பற்றி வருகிறது. பாபா அணு ஆராய்ச்சி கழகம் இதற்கென தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. தினமும் 500 கிலோ உணவு மற்றும் காய்கறி கழிவிலிருந்து 29 கிலோ எல்.பி.ஜி.,க்கு இணையான பயோகேஸ் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதலீடு தேவைப்படும். இதையே 2 ஆண்டுகளில் அனைத்து கேன்டீன், ஹோட்டல்கள் திருமண மண்டபங்களில் நிறுவ அரசு உத்தரவிடவேண்டும். மின் நிதிக்கழகத்திலிருந்து இதற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இதில் முதலீட்டாளர்களுக்கு 2 ஆண்டுகளில் முதலீடு செய்த பணத்தை மீட்டுவிடும் வாய்ப்புள்ளது.

வாட்டர் ஹீட்டர்கள்: பெங்களூரு மற்றும் டில்லி போல, சூரியஒளி வாட்டர் ஹீட்டர்களை ஊக்குவிக்க, அதை நிறுவும் வீடுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு மட்டும் வீடுகட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், கேன்டீன், ஹோட்டல்கள், மடங்கள், சர்ச் உள்ளிட்டவற்றில், குறிப்பதற்கான வெந்நீர் தேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே மானியமும் குறைந்த வட்டி வங்கிக்கடனும் நடைமுறையில் உள்ளது. அரசு கண்டிப்பாக சட்டம் இயற்றினால் ஒழிய இதை நிறுவ யாரும் முன்வரமாட்டார்கள்.

நியான் விளக்குகள்: நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் நியான் விளக்குகளை பயன்படுத்துகின்றன. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதிக விலை கொடுத்து அந்நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குகின்றன. நியான் விளக்குகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அதிக விலை கொடுத்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டில்லியில் உள்ள விளம்பர பலகைகள் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தியே விளக்குளை எரிக்கின்றன. அதுபோல், நியான் விளக்குகளுக்கும் இம்முறையை
தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும்.
நன்றி தினமலர்...... 

Saturday

புதிய லேப்டப்: கூகுள் அறிமுகம்

இணையப் பயன்பாடுகள்    மட்டுமின்றி புதிய பல்வேறு வகையில்  இன்று முன்னிலையில் உள்ள கூகுள் நிறுவனம் புதிதாக புதியவகையில் ஒரு லேப்டப்பை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.

Wednesday

கன்சிராம் (இந்திய அரசியலின் ஒரு சகாப்தம்)

கன்சிராம் சுதந்திர இந்தியாவில் அம்பேத்கருக்குப் பின் அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் அரசியல் தலைவர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலும், சக்கர நாற்காலியிலும் இருந்த அந்த மாபெரும் தலைவர் தம்முடைய 72 ஆம் வயதில் மாயாவதியின் இல்லத்தில் காலமானார். அவருடன் அரசியல் களத்தில் மாறுபடும் இராம் விலாஸ் பாஸ்வான் கூட அவரை “தலித்துகளின் மெசைய்யா” என்றே வர்ணிக்கிறார்.

கன்சிராம் மிகப்பெரிய சொல்லாடல் புரியும் பேச்சாளராக இல்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் பேசும் எளிமையான பேச்சாளர். கன்சிராம் நடைமுறை அரசியலின் இராஜதந்திரியாக விளங்கினார்.

Monday

மாபெரும் நிர்வாணத் திருவிழா!

 SALOUFEST என்பது ஸ்பெயினின் கடற்கரைகளில் பிரிட்டிஷ் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளும் ஒரு சுதந்திரமான களியாட்டக் கொண்டாட்டம்.

ஒரு வார காலம் நீடிக்கும் இந்த விழாவில் இம்முறை எட்டாயிரம் பிரிட்டிஷ் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

மது அருந்துவது, போதை தலைக்கேறிய நிலையில் ஆடைகளைக் களைந்து எறிவது, நிர்வாணமாக மற்றவர்கள் முன் நிற்பது, சாக்கடைகளில் விழுந்து கிடப்பது, என்னைக் கற்பழித்து விடு என மாணவிகள் கெஞ்சுவது, அதை மாணவர்கள் மனப்பூர்வமாக நிறைவேற்றி வைப்பது, பகிரங்கமாக உடல் உறவு கொள்வது, இப்படி அட்டகாசங்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை.

Sunday

Apple Vs Pear

உடல் பருமனடைதலால் பெண்களின் புத்திக்கூர்மைக்கும் மூளையின் தொழிற்பாட்டிற்கும் தீங்கு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உடல் பருமனை வைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் அறிவாற்றலைக் கணிக்கலாம். வயது முதிர்ந்த பெண்களின் உடல் நிறை கூடிக்கொண்டு செல்லச் செல்ல அவர்களது ஞாபகசக்தியைப் பேணும் தன்மையும் புத்திகூர்மையும் புலன் உணர்வு தன்மையும் குறைந்து போகின்றது என்று அமெரிக்காவில் ஒரு புதிய ஆய்வில் வெளியாகி உள்ளது.
தோற்றத்தின் அடிப்படையில் உடல் பருமன் கணக்கீடு இடைப்பகுதிக்கு கீழே எடை அதிகமாயின் பேரி உருவம் (Pear shape) எனவும், இடைப்பகுதிக்கு மேலே அதிகமாயின் ஆப்பிள் வடிவம் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

தியானம்

தளர்வாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கைகளை தொடையின் மீது வைத்து, கண்களை மூடி நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.

குறிப்பிடத்தகுந்த ஒரு விதிவிலக்கு நம்ம மூளைதான். நாம பிறக்கும் போதே நம்ம வாழ்நாள் முழுசுக்கும் தேவையான அளவு மூளைச் செல்களோட பிறக்கிறோம். தேய்ஞ்சு போன, ரிப்பேர் ஆன செல்கள் அனைத்தும் மடிஞ்சு போயிரும். அதுக்கு பதிலா புது செல்கள் உருவாவதில்லை.

ஒரு செல் 600 வகையான என்சைம்களை உருவாக்க கூடிய ஒரு உற்பத்திக்கூடம். ஆர்.என்.ஏ சொல்றமாதிரி கேட்டு எப்போ எது வேணுமோ அதை உருவாக்கி புரதங்களை தொகுக்குது.

THE INDIA CABLES FROM WIKILEAKS

LONDON: WikiLeaks founder Julian Assange has said the “tremendous” anti-corruption movement “building up” in India is a result of the publication of “cablegate” revelations by The Hindu in recent weeks.

மற்ற இந்திய ஊடகங்கள் ஏதும் வெளியிட எந்தவித முயற்சியும் செய்யாத நேரத்தில், சட்டரீதியான பாதுகாப்புடன் விக்கிலீக்ஸ் உடன் முறையான ஒப்பந்தம் செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. எவற்றையும் 'உள்'ளரசியல் காரணமாக தணிக்கை செய்யாமல்  கிடைக்கப்பெற்ற அனைத்து ஆவணங்களையும் மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டியது ஹிந்துவின் தார்மீகக் கடமை, ஏனெனில் ஜூலியனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'தணிக்கை'.

Wednesday

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல்

ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற ஈழப் பெண் ஒருவரின் கண்ணீர் கதறல் ! பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார் , சொல்ல முடியாத துயரில் இருக்கும் இவருக்கு தமிழ் நாடு தொப்புள்கொடி உறவுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முடிவுவரை பாருங்கள் தமிழர்களே 

Sunday

சீமான் எங்கே போகிறார்

காங்கிரசு தமிழகத்தில் ஏற்கனவே முடிந்து விட கூடிய கட்டத்தில் தான் இருக்கிறது . இவரு காங்கிரசு என்ற செத்த பாம்பை அடிக்க போகிறாராம். என்ன கொடுமையா இது . காக்கா உட்கார பனம்பழம் விழ போகிற கதை தான் அண்ணன் வரும் தேர்தலில் காங்கிரசை ஒழிப்பதாக சவடால் விட்டு கொண்டு அலைவதும் .

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த ஆலோசனை : ஆவணம் ஏதும் இல்லாத அதிசயம்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த ஆலோசனை : ஆவணம் ஏதும் இல்லாத அதிசயம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜாவுடன், அட்டர்னி ஜெனரல் வாகனவாதி ஆலோசனை நடத்தினார். இருப்பினும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஆவணம் இல்லை என்று தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ், எஸ்.சி.அகர்வால் என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விஷயங்கள் குறித்து, கடந்த 2007ம் ஆண்டு, டிசம்பர் முதல் வாரத்தில், மத்திய வெளியுறவு அமைச்சராக அன்று இருந்த பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை.

தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி!

தமிழில் கிரந்தத்தைச் சேர்க்கவும், கிரந்தத்தில் தமிழைப் புகுத்தவும் இந்திய நடுவணரசு 2008-ம் ஆண்டிலிருந்து பல கூட்டங்களை நடத்தியிருக்கிறது. (உலகத் தகவல் தமிழ் தொழில் நுட்பமன்றம் என்ற "உத்தமம்" அமைப்பும் ஏற்கனவே கிரந்தத்துக்கு வழிவிட்டு ஓய்வெடுத்ததில் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பியத்தை புதுப்பிக்காமல் காலாவதியானதில் அதுவும் தக்க ஆலோசனையை அரசுக்கு சொல்லாமற் போனது.) தமிழக அரசை, நடுவணரசின் தகவல் தொழில்நுட்ப ஆணையம் கிரந்தக் கலப்புக் குறித்துக் கருத்துக் கேட்டும் தமிழக அரசின் சார்பில் எவரும் அந்தப்பக்கம் கூட தலைவைத்துப் படுக்காததால் ஏகமனதாக 2010ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதியாகத் தீர்மானித்து அக்டோபர் மாதம் 18/10/2010-ல் ஒருங்குறி சேர்த்தியத்தில் தமது பரிந்துரையை அளித்தது. எப்படி? ஒருங்குறி சேர்த்தியம் 6/11/2010 அன்று கூடும் கூட்டத்தில் இது குறித்து தீர்மானித்து நடுவணரசின் பரிந்துரையை ஏற்க இருந்தது.
 

Wednesday

Google has launched its online Magazine named Think Quarterly. So what is the Magazine about ?
According to the website
Like most companies, Google regularly communicates with our business customers via email newsletters, updates on our official blogs, and printed materials.
On this occasion, we’ve sent a short book about data, called Think Quarterly, to a small number of our UK partners and advertisers. You’re now on the companion website, thinkquarterly.co.uk (also available at m.thinkquarterly.co.uk, if you’re on the move).
Interestingly Google is using WordPress to publish this website – Matt Says

You can follow Think Quarterly on Twitter

Sunday

லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா?

லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.

Friday

Julian Assange Appeals Extradition

"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படிஎனக்குத்தோன்றியது தான் விக்கிலீக்ஸ்" - ஜூலியன்.

விக்கி லீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்கே (37). ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Saturday

Google Body.


Google நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ஓர் இலவச வசதிதான் Google Body. இதன்மூலம் மனித உடலினுள் இருக்கும் பாகங்களை அறிந்து கொள்ளமுடியும். தசைநார் தொகுதி, எலும்பு தொகுதி, நரம்புத் தொகுதி என விரும்பிய தொகுதிகளை நீக்கியோ அல்லது தோன்றச் சொய்தோ ஆராய முடியும். அத்துடன் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய விஞ்ஞானப் பெயர்களையும் அறிந்து கொள்ள முடிவதனால் உயிரியல் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு சேவையாக இருக்கும்.
Google Earth மூலம் உலகின் பாகங்களை ஆராயும் வசதியை அனைவருக்கும் இலவசமாக வழங்கிய Google தற்பொழுது மனித உடலின் பாகங்களை ஆராயும் வசதியினை அதி நவீன 3D தொழினுட்ப வசதியுடன் வழங்கியுள்ளது. Google Chrome உலாவியின் புதிய பதிப்பில் இந்த சேவை சிறப்பாக இயங்கும்.
நீங்களும் இந்த சேவையை பரீட்சிக்க பின்வரும் இணைப்பிற்கு செல்லுங்கள்.
http://bodybrowser.googlelabs.com/body.html

மனதுடன் யுத்தம்

மனம் என்பது விதவிதமான மாயைகளை தோற்றுவிக்கக்கூடியது.அதிலும்,மற்றவர்களிடம் இருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவரது மனதில் எப்படியாவது விதைக்க அது முயன்று கொண்டே இருக்கும்.ஒரு முறை அத்தகைய உணர்வு ஒருவர் மனதில் புகுந்து விட்டால் அதிலிருந்து எளிதாக யாரும் மீள முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும்.அதைத் தாண்டி நம் மனதுக்குள் எதுவும் நுழைய முடியாது.ஒவ்வொரு எண்ணமும்,ஒவ்வொரு கருத்தும் நான் என்ற உணர்வுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே,மனதில் நுழைய முடியும்.இயற்கை பற்றிய,இறைவன் பற்றிய கருத்துக்களில் கூட நமக்குப் பிடித்தமானது மட்டுமே நம்மால் ஏற்கப்படும்.யுத்தத்தில் பெரிய யுத்தம்,ஒரு மனிதன் தன மனதுடன் நடத்தும் யுத்தமே.நாம் மனதிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணரக் கூட

கொஞ்சம் அசிங்கமான விஷயம் ஒண்ணு சொல்லணும். யாரும் கோவிச்சுக்கக்கூடாது. இதப்போய் சொல்லவந்துட்டான் என்று திட்டக்கூடாது. உங்ககிட்ட சொல்லாம யாருட்ட போய் முட்டிக்கிறது?
வேற ஒண்ணும் இல்லீங்க...நம்ம ஊர்ல பைக்குல ஹெல்மட் இல்லாம போறதுண்டா? அப்படி போனீங்கன்னா உயிருக்குப் பயம் அது இதுன்னு உங்களைப் பயமுறுத்த இதை எழுதலை. இன்னோரு பயங்கரத்தைப் பற்றிச் சொல்லணும்.


உங்களுக்கு முன்னால் போறவர் தீடீர்னு திரும்பி எச்சில் துப்புவார் பாருங்க..அப்போ தெரியும் ஹெல்மட் மகிமை. அதே மாதிரி, நின்று கொண்டிருக்கும் பேருந்தைத் தாண்டிப் போக வேண்டிய நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போக வேண்டியதுள்ளது - எந்த நேரத்தில் எந்தப் புண்ணியவான்(வதி) உள்ளேயிருந்து அபிஷேக விழா நடத்துவார்களோ, யார் கண்டது!

Wednesday

காலக்கண்ணாடி



2008

* தமிழகத்தில் மின்னணு கருவிகள் (electronic appliances) வாங்கினால் தமிழிலேயே நம் மக்களுக்கு எளிதாகப் புரியும் இடைமுகத்துடன் (interface) கிடைக்கின்றன.
* கணினியில் பயன்படுத்தத் தேவைப்படும் மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கூட பயன்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.
* தமிழ் மாணவர் எவரும் ஆங்கில அறிவுக் குறைவால் வாய்ப்பை இழக்கும் நிலை மாற ஆரம்பிக்கிறது.

2010

* தமிழில் அறிவுக் கருவூலங்கள் (encyclopedia) பெருகி, யாரும் தமிழ் வழியே உலகின் அறிவுச் செல்வங்களை அணுகலாம் என்ற நிலைமை.
* தமிழக அரசுப் பணிகள் யாவும் தமிழிலேயே நடைபெறுகின்றன. தகவல் இணைப்புகளால் அரசு அலுவல்களில் கால தாமதம், ஊழல் புரிவதற்கான வாய்ப்புகள் ஒழிந்து போகின்றன.
* கடலுக்குப் போகும் மீனவர்களும், பயிர் போடும் விவசாயிகளும் தமக்கு வேண்டிய விபரங்களைத் திரட்டவும், தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
* வீட்டு செலவுக் கணக்குக்கும், கடைகளில் விற்பனைக் கணக்கும், செய்தித்தாள் போடுபவரின் கணக்கும், பால் கணக்கும் கணினிகளின் மூலம் செய்து கொள்ள முடிகிறது.
* தமிழ் மருத்தவர்களும், தமிழ் பொறியாளர்களும், தமிழ் வணிகர்களும், வழக்கறிஞர்களும் தமது ஆவணங்களையும் (documents), குறிப்புகளையும் (records) முழுமையாகப் பதிவு செய்து தரமான சேவை வழங்க முடிகிறது.
* படித்த இளைஞர்கள் யாவருக்கும் நமது சமூகத்திலேயே உலகத் தரத்திலான வேலை வாய்ப்புகளும், ஊதியமும் கிடைக்கிறது.

2020

* ஆப்பிளின் iPod போல, மைக்ரோசாப்டின் விண்டோசு போல், லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகையே மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு (inventions) தமிழகம் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது.
* மரபணு ஆராய்ச்சிகள், இயற்பியலின் முன்னணி பணிகள் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் தமிழிலேயே நடைபெறுகிறது.
* உயர்தர திரைப்படங்கள், உலகே வியக்கும் கலைப் படைப்புகள் தமிழகத்தில் உருவாகின்றன.
* தரமான சாலைகள், உயர்வான பொதுச் சேவைகள், எல்லோருக்கும் மருத்துவ வசதி, இயலாதவருக்கு சமூக ஆதரவு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுள்ள சமூகமாக தமிழகம் உலகுக்கே வழி காட்டுகிறது.

தத்துவம்


“நான் மிருகத்தனமாய் இருந்து

என்னை முறியடிக்க நீங்களும்

மிருகத்தனமான முறையையே உபயோகித்தால்

நீங்களும் என்னைப்போலவே

மிருகமாகி விடுகிறீர்கள்.”
...ஜெ.கிருஷ்ணமூர்த்தி

திரும‌ண‌ம்


அற்புத‌மான‌வ‌ர்க‌ள் திரும‌ண‌மும் அற்புத‌மாகிற‌து. மோச‌மான‌வ‌ர்க‌ள் சேர்ந்தாலோ அது மோச‌மாகிற‌து. ம‌ற்ற‌படி திரும‌ண‌ம் ந‌ல்ல‌தும் அல்ல‌ , கெட்ட‌தும் அல்ல‌
-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவ்



Marriage means cutting down your freedom;Getting attached legally to a woman/man. But there is nothing higher than Freedom
- Osho



காத‌ல் க‌ல்யாண‌மா நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மா என்ப‌தையும் தாண்டி திரும‌ண‌ம் என்ப‌து தேவைதானா அதுவும் இன்றைய‌ நெருக்க‌டியில் அதை க‌டைசிவரை ஜீவிக்க‌ வைத்திருப்ப‌து சாத்திய‌ம்தானா என்ற‌ ஐய‌ப்பாடுக‌ள் ப‌ல இருந்தும் நாமெல்லாம் அதை விட்டு விலகாம‌ல் அல்ல‌து அதை தெரிந்துகொள்ள‌ முய‌ற்சிக்காம‌ல் த‌டால‌டியாக‌ அந்த‌ மாய‌ சுழ‌லில் சிக்குவதே ஒரு விசித்திர‌ம்.

ஆண்க‌ளுக்கு க‌ல்யாண‌ம் என்ப‌து அடிப்ப‌டையில் ஒரு உட‌ல் தேவை, அந்த‌ தேவையிலே ப‌ல‌ர் நின்று விடுவதால் அதை தாண்டிய‌ ப‌ல‌ உன்ன‌த‌ங்க‌ள் புரிப‌டுவ‌தில்லை. பெண்க‌ளுக்கு அது ஒரு பாதுகாப்பு அந்த‌ பாதுகாப்பு கிடைக்காத‌ ப‌ட்ச‌த்தில் அல்ல‌து தேவைப‌டாத‌ ப‌ட்ச‌த்தில் அதில் இருந்து வெளியேறும் வ‌ழி அன்றைய‌ கால‌ கட்ட‌த்தை போல‌ல்லாம‌ல் இன்று எல்லா திசைக‌ளிலும் திற‌ந்திருக்கிற‌து.

இந்த‌ குழ‌ப்ப‌ங்க‌ளோடு கால‌ குழ‌ப்ப‌ங்க‌ளும் கலாச்சார‌ குழ‌ப்ப‌ங்க‌ளும் வேறு.இந்த‌ கால‌கட்ட‌த்தில் ஆண்க‌ளின் உல‌க‌மும் பெண்க‌ளின் உல‌க‌மும் இரு வேறு திசைக‌ளில் ப‌ய‌ண‌ப்ப‌ட்டிருப்ப‌தாய் தோன்றுகிற‌து. அதில் ப‌ய‌ணம் செய்யும் ஆணும் பெண்ணும் திரும‌ண‌ம் செய்து அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ர‌ எத்த‌னிப்ப‌து பெரும் ஆச்ச‌ரிய‌மே.

வ‌யிற்றில் ப‌ட்டாம்பூச்சி ப‌ற‌ப‌ற‌க்க‌ காத‌லை சொல்லி அல்ல‌து ம‌ண‌ப்பெண்/ம‌ண‌ம‌க‌ன் பார்த்து க‌ல்யாண‌மெனும் அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ரும்

ஆண்:
1) வேலை/தொழில்
2) ந‌ண்ப‌ர்க‌ள்
3) வார‌ விடுமுறை கொண்டாட்ட‌ங்க‌ள்

பெண்:
1) வீடு வாங்குத‌ல்/க‌ட்டுத‌ல்
2) குடும்ப‌ ந‌ல‌ன்
3) பிள்ளைக‌ளின் அதீத‌ எதிர்கால‌ க‌ன‌வு
4) மேற்சொன்ன‌வைக‌ளை அடைய‌ க‌ண‌வ‌ணை ச‌ரிக‌ட்டும் உத்திக‌ள்

என‌ மாறிவிட்டார்க‌ள்.

மேற்சொன்ன‌வைக‌ளில் அட‌ங்காத‌ ஆண் தஞ்சாவூர் த‌லையாட்டி பொம்மைக‌ள் எனும் அடை மொழியோடும்,பெண் முர‌ட்டுதன‌மாக‌ அட‌க்கி வைக்க‌ப்ப‌ட்டும் ச‌மூக‌ பார்வையில் ச‌கிப்புத‌ன்மை என்று பெய‌ரிட்டு வாழ்கிறார்க‌ள். ஒரு குறிப்பிட்ட‌ கால‌ க‌ட்ட‌த்திற்கு பிற‌கு திரும்பி பார்க்கும்போது எதுவோ தொலைந்த‌தாய் திகைத்துப்போகிறார்க‌ள்

அப்புற‌ம் என்ன‌ அது ஆங்…..காத‌ல்…காத‌ல் அது எங்கோ ம‌ங்க‌லாக‌ தேய்ந்து அழிந்துகொண்டிருப்ப‌தாக‌வே தோன்றுகிற‌து. இனி வ‌ருங் கால‌கட்ட‌ங்க‌ளில் கால‌ம் ம‌னித‌னை க‌ல்யாண‌த்தைவிட்டு ஒதுக்கி வைக்கும் என்றே தோன்றுகிற‌து

Thursday

Get this widget | Track details | eSnips Social DNA

தொடக்கம்

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள் தான் அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.
-திருவள்ளுவர் -(அதி: நாணுத் துறவுரைத்தல்)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!