Friday

திருமந்திரம் என்னும் ஒப்பற்ற சித்தாந்த நூல் ஒன்பது பகுதிகளை கொண்டுள்ளது .ஒவ்வொரு பகுதிக்கும் "தந்திரம் " என்று பெயர் .ஆகா , திருமூலர் மந்திரமும் அதனுள் தந்திரங்களும் மருந்துமாக மூவாயிரம் பாடல்களை செய்துள்ளார்.

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்மெள்ளக்
குடைந்துநின் றாடார் வினைகெடப்பள்ளம்
மேடும் பறந்து திரிவரேகள்ளமன முடைக் கல்வியில் லோரே "

சமுதாய வளத்தையும், சமுதாய ஒழுங்கையும் பாதுகாத்துப் பயனாகிய இன்பம் துய்க்கும் பக்குவத்தை மனம் பெற்றுக் கொள்ளவேண்டும். இதையெல்லம் விட முக்கியமாக மனம் தன்னையே நன்கு பூரணமாக அறிந்து கொண்டாக வேண்டும். ஏனெனில் , எல்லாமே மனத்திற்குள் இருந்து தான் வரவேண்டும். மனத்தின் மகத்துவத்தை உணராதவர் அறிவில்லாதவர்களே. அவர்கள், தனக்கும் சமுதாயத்துக்கும் துன்பம் வீளைவித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இன்பமும் , அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என அறியாமல் எங்கெல்லாமோ அவற்றைத் தேடி அலைந்து துன்புறுவார்கள்.

No comments: