Sunday

சீமான் எங்கே போகிறார்

காங்கிரசு தமிழகத்தில் ஏற்கனவே முடிந்து விட கூடிய கட்டத்தில் தான் இருக்கிறது . இவரு காங்கிரசு என்ற செத்த பாம்பை அடிக்க போகிறாராம். என்ன கொடுமையா இது . காக்கா உட்கார பனம்பழம் விழ போகிற கதை தான் அண்ணன் வரும் தேர்தலில் காங்கிரசை ஒழிப்பதாக சவடால் விட்டு கொண்டு அலைவதும் .
முன்பெல்லாம் ஈழ தமிழர்களுக்காக உரக்க குரல் கொடுத்த அய்யா ராமதாசு இப்போது வன்னியர்களிடையே ஈழ தமிழர்களை தேடி கொண்டு இருக்கிறார். திருமாவோ ஈழ மக்களின் வாழ்வை விட தன்னுடைய அரசியல் வாழ்க்கை முக்கியம் என்று சென்று விட்டார் . பெரியவர் நெடுமாறனோ யாராவது மேடை போட்டு அதில் அவருக்கு குந்திக்க ஒரு இருக்கை குடுத்தால் போதும் என்ற நிலைக்கு சென்று விட்டார். ஆரம்ப காலத்தில் தாய் தமிழகத்து இளைஞர்களிடையே ஈழத்து மக்களின் அவலங்களை பற்றி சிந்திக்க வைத்த அண்ணன் வைகோவோ சகோதரி கைச்செலவுக்கு காசு குடுத்து கொண்டிருந்ததால் தோட்டத்திலேயே அடக்கமாகி விட்டிருந்தார் ( சகோதரி செயலலிதா வைகோ என்ற கடாவிற்க்கு சும்மா ஒன்றும் தீனி போடவில்லை தேர்தல் திருவிழா வரும் போது பொலி போடுவதற்காக என்று இப்ப தான் புரிகிறது, எப்படியோ புரட்சி சகோதரி, அடிக்கடி கண்ணீர் விடும் கடாவை 1000 கோடி ரூபாய்க்கு விற்று போட்டதன் மூலம் விட்டதை பிடித்து விட்டார்) . ஆனால் நம்ம அண்ணன் சீமான் ஓடுற ஓட்டத்தை பார்த்தால் மேலே கூறிய எல்லாரையும் பின்னுக்கு தள்ளி விடுவார் என்றே தோன்றுகிறது.

No comments: