Saturday

மைக்ரோ பைனான்ஸ்

ஒருவர் உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைகழகத்தில் எம்.ஏ பட்டம் பெறுகிறா. அதன்பின் யுனிவர்சிடி ஆஃப் சிகாகோவில் முனைவர் பட்டம் பெறுகிறார்.ஃபுல்ஃப்ரைட் ஸ்காலர் ஆக சிறப்பும் பெறுகிறார் என் வைத்துக்கொள்வோம்.அடுத்ததாக அவர் என்ன செய்வார்?

பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் 250K சம்பளம் வாங்கிக்கொண்டு யாட் ஒன்றை வாங்கிக்கொண்டு ஜாலியாக விடுமுறை எடுத்துக்கொண்டு காலத்தை கழிப்பார் என்று தான் நினைப்போம்.

ஆனால் விக்ரம் அகூலா அப்படி செய்யவில்லை.

பத்தாண்டுகள் மைக்ரோ பைனான்ஸ் துறையில் அனுபவம் பெற்றார். அதன்பின் நேராக இந்தியா வந்தார். எஸ்.கே.எஸ் மைக்ரோ பைனான்ஸ் எனும் கம்பனியை துவக்கினார். கம்பனியின் நோக்கம் கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் மிக வறுமையான பகுதிகளில் இருக்கும் அடித்தட்டு ஏழை பெண்களுக்கு கடனுதவியும், இன்சூரன்சும் அளிப்பது.

எஸ்.கே.எஸ் இன்று உலகின் அதிக வளர்ச்சி பெறும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனமாக மாறி உள்ளது.இதுவரை $72 மில்லியன்(280 கோடி) ரூபாய் கடனை 300,000 பெண்களுக்கு வழங்கி உள்ளது.ஓன வருடம் மட்டும் $50 மியன் கடனை வழங்கி உள்ளது.இந்தியாவின் மிக வறுமையான 11 மாநிலங்களில்(சட்டிஸ்கார்,ஜார்கண்ட், அந்திரா, ராஜஸ்தான்,ஒரிசா, ம.பி, உ.பி,,பீகார்) செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அடுத்த வருடம் 7 லட்சம் பயனாளிகளை இலக்காக வைத்திருக்கிறது.

பணக்காரர்களுக்கே கடன் தந்தால் பணம் திரும்ப வருவதில்லை.அப்படி இருக்க ஏழைகளுக்கு கடன் தந்தால் பணம் திரும்பி வரவா போகிறது என்று நினைக்கிறீர்களா?அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.விக்ரமின் நிறுவனத்தில் 98% கடன்கள் சொன்ன தேதியில் வசூலாகின்றனவாம்.

விக்ரமின் நிறுவனத்தில் கடனுதவி பெறுபவர்கள் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள்.அவர்களுக்கு சுமார் 5000 ரூபாய் அளவு கடனுதவி வழங்குகிறார் விக்ரம். கடன் பெறுபவ்ர்கள் அந்த கடனை ஆடு/கோழி வளர்த்தல், பழம்/காய்கறி வாங்கி விற்பது, மண்பானை செய்வது, கூடை முனைவது போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்களாம். ஆபத்துகாலங்களில் வட்டி இல்லாத கடன் கூட வழங்குகிறாராம் விக்ரம் அகூலா. அதுபோக கடனாளிகளுக்கு இன்சுரன்ஸ் வசதியும் செய்து தருகிறாராம். அதுபோக எஸ்.கே.எஸ் கல்விநிறுவனங்கள் மூலமாக பள்ளியிலிருந்து பாதியில் நின்ற பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியும் அளிக்கப்படுகிறதாம்.

இவரது சேவையை பாராட்டி டைம் பத்திரிக்கை இவரை "புதிய உலகை உருவாக்கும் நூறு சிற்பிகளுல் ஒருவர்" என்று கவ்ரவ்திருக்கிறது.

காசு,பணம், வசதி,ஆடம்பரம் என அனைத்தும் நிரம்பிய வாழ்வை உதறி விட்டு "நாடென்ன செய்தது எனக்கு?" என கேட்காமல் 'நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டதால் தான் கிட்டத்தட்ட 7 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு சொர்க்க வாசலை திறக்க விக்ரம் அகூலாவால் முடிந்திருக்கிறது.

திரானியற்ற இன்னொரு தமிழன்


வானம்
வெறித்து அமர்ந்திருந்தாள்
கிழவி.

ஒட்டிய வயிறும்
கிழிந்த உடையுமென
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது
ஓர் பிள்ளை

சப்பத்து சப்தம்
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்
இளையவன்

தூரத்தில் எங்கோ
கேட்டது இன்று
கண்ணில் பட்டவளின்
கதறல்

மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த
புத்தனின் அன்னம்
சுட்டு வீழத்தப்பட்டது
உளவு குற்றம் சுமத்தி

துப்பாக்கி வாசத்தோடு
வந்தவர்கள் புத்தனின்
காதில் ஓதினார்கள்
யாவரும் நலமென்று

புத்தனும் புன்னகையோடு
கேட்டு தலையாட்டினான்
அன்னம் திரும்பாததன்
பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று

- ப்ரியன்.

வரதட்சணை

மஹர் Vs வரதட்சணை

பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமண கொடைகளை) மகிழ்வோடு வழங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 4:4)

….ஒரு (பொற்)குவியலையே (மஹராக) நீங்கள் அவர்களுக்குக் கொடுத்திருந்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது….. (அல்குர்ஆன் 4:20)

மஹர் எனும் மணக்கொடையை உங்கள் மனைவியருக்கு மகிழ்வோடு வழங்கிவிடுங்கள் என்று இறைவன் கூறியிருக்க, இன்று இறைவனின் கட்டளைக்கு எதிராக, பெண்வீட்டாரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி பணமாகவும், பண்டமாகவும், நகையாகவும், விருந்தாகவும், பொருட்களாகவும், துணிகளாகவும், நிலம் மற்றும் வீடுகளாகவும் வரதட்சணை வாங்குவதை பார்க்கிறோம். இதில் சிலர் உங்கள் பெண்ணுக்கு, போடுவதை போடுங்கள்…..உங்கள் பெண்ணுக்கு போடுவதை போடாமலா இருப்பீர்கள்…? என பொடிவைத்து மறைமுகமாக வரதட்சணை எனும் தூண்டிலை, முதலில் போட்டுவிடுகின்றனர்.

ஊர் வழக்கம் மற்றும் சடங்கு சம்பிரதாயப்படி கொடுத்தனுப்பவில்லை எனில் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்கள் அல்லது தம் பெண்ணை நிம்மதியாக வாழவிடாமல் குத்திக் காட்டுவார்கள் என்ற பயத்தில், பெண் வீட்டார்கள் பொருட்களை கொடுத்தனுப்புகின்றார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, பெண் வீட்டாரிடம் கேட்டுப் பெறுவதுதான் வரதட்சணை, அவர்களாக தந்தால் தவறேதுமில்லை, பெற்றுக்கொள்ளலாம் என சிலர் கூறுகின்றனர்.

இப்படி கொடுத்துப் பழக்கப் படுத்தியிருப்பதால்தான் மணமுடிக்க முடியாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கை, சமுதாயப் பந்தலில் அதிகமாக படர்ந்து விட்டது. அவர்கள் “வடிக்கும் கண்ணீருக்கும்… வெடிக்கும் பெருமூச்சுக்கும்…. அவர்தம் பெற்றோர்களின் மன உலைச்சலுக்கும்…” இவையே காரணமாக இருப்பதால், இத்தகைய “தீய முன்மாதிரியை” தவிர்ந்துக் கொள்வதே சிறந்ததாகும்.

நாள், சட்சத்திரம், ஜாதகம் இல்லை

எவர் ஜோதிடனிடம் (எதிர்காலத்தையும், மறைவான விஷயத்தையும் கணிப்பவனிடம்) வந்து, அவன் கூறுபவற்றை (கேட்டு) உண்மைப்படுத்துவாரோ, அவர் முஹம்மது(ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டார், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா(ரலி), நூல்: அபூதாவுத்

அன்பளிப்பு அல்லது மொய்

ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ், அவருக்கு வழங்கிய பாக்கியமாகும், என நபி(ஸல்) கூறினார்கள்.

காலித் பின் அதீ(ரலி), நூல்: அஹ்மத்

அன்பளிப்பு செய்துவிட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன், வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவன் போன்றவனாவான் என நபி(ஸல்) கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

வலிமா விருந்து

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலிமா (திருமண) உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும். அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

தம்பதியரின் கடமைகள்

நல்ல குணம் கொண்டவர்களே, ஈமானில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே. அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சுவனத்தில் நுழைவாள்.

உம்மு ஸலமா(ரலி), நூல்: இப்னுமாஜா

மணமக்களை வாழ்த்துதல்

நபி(ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்”

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும் என்று கூறுவார்கள்.

அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத்

எச்சரிக்கை

எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (விதித்துள்ள) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகில் புகுத்துவான். அதில் அவர் நிரந்தரமாக தங்கிவிடுவார் அவருக்கு இழிவான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 4:14)

புத்தகம்

இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை; நேரமில்லை என்பதாலோ படிக்குமளவு முக்கியமானவை இல்லை என்பதாலோ இல்லை, மனத்தளவில் படிப்பதில் ஈடுபாடு குறைந்திருக்கிறது. இது அவ்வப்போது நேரும் என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக இப்படி இருக்கிறது. இந்த நிலை ஆரம்பமாகும் முந்தைய வாரம் என் நண்பர் ஒரு மாதத்தில் எவ்வளவு படிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சுமாராகப் பத்து நூல்கள் என்று சொல்லியிருக்கிறேன். சுவாசத்திற்கு அடுத்து நான் உயிருடன் இருக்க, படிப்பது எனக்கு அவ்வளவு அவசியமான ஒன்று.

இது நிஜம். வருத்தம் வலி மட்டுமல்ல, ஒரு சுகம். அழுதால்தான் பால் கிடைக்கும் என்று கற்றுக்கொண்ட குழந்தை பசியால் கூட அழுவதில்லை, யாரும் தன்னைக் கொஞ்சவில்லையே என்றும் அழும். இந்த அனிச்சை கவனஈர்ப்பு காலந்தோறும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படும். மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான். இதன் முதல் கட்டம் மனம், என்னால் முடியாது என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது. இந்த அவலம் அசிங்கமானதோ அருவருப்பானதோ அல்ல, இயல்பானது. உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.

யாயும் ஞாயும்

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே."
(குறுந்தொகை:40)

'இந்தச் செம்புலப்பெயல் நீர் போல' உவமையை சிலாகித்து, அதற்கு வெவ்வேறான விளக்கங்கள் கூறி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள்! அதனால், மற்ற வரிகள் கிளர்த்தும் தொடர்பான சிந்தனைகளில் மனம் போய்விட்டது..
இந்த அற்புதமான பாடலை எழுதிய புலவரின் பெயர் கூட அறிய முடியாமல் நேரிட்டதால், அவர் பெயரையே "செம்புலப்பெயனீரார்" என்று வழங்கும் படி ஆயிற்று!

உதிர்தல்

சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...

அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்னாகுமென்று...

ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது

உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..

சில நேரங்களில்
கவிதைகளாகவும்.

"என் பெயரோ
அவள் பெயரோ
எங்கள் பெயர்களோ அற்று
இருக்கும்
இந்தக் கவிதையில்
எங்கேயாவது
காதல் பிடிபடலாம்
அப்போது நீங்கள்
கண்ணீர் சிந்தலாம்.
காறி உமிழலாம்.
கனத்த மனதோடு சிரிக்கலாம்.
அது
எங்கள் காதல் என்பதை மறந்து.."

- கார்க்கி