Saturday

மைக்ரோ பைனான்ஸ்

ஒருவர் உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைகழகத்தில் எம்.ஏ பட்டம் பெறுகிறா. அதன்பின் யுனிவர்சிடி ஆஃப் சிகாகோவில் முனைவர் பட்டம் பெறுகிறார்.ஃபுல்ஃப்ரைட் ஸ்காலர் ஆக சிறப்பும் பெறுகிறார் என் வைத்துக்கொள்வோம்.அடுத்ததாக அவர் என்ன செய்வார்?

பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் 250K சம்பளம் வாங்கிக்கொண்டு யாட் ஒன்றை வாங்கிக்கொண்டு ஜாலியாக விடுமுறை எடுத்துக்கொண்டு காலத்தை கழிப்பார் என்று தான் நினைப்போம்.

ஆனால் விக்ரம் அகூலா அப்படி செய்யவில்லை.

பத்தாண்டுகள் மைக்ரோ பைனான்ஸ் துறையில் அனுபவம் பெற்றார். அதன்பின் நேராக இந்தியா வந்தார். எஸ்.கே.எஸ் மைக்ரோ பைனான்ஸ் எனும் கம்பனியை துவக்கினார். கம்பனியின் நோக்கம் கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் மிக வறுமையான பகுதிகளில் இருக்கும் அடித்தட்டு ஏழை பெண்களுக்கு கடனுதவியும், இன்சூரன்சும் அளிப்பது.

எஸ்.கே.எஸ் இன்று உலகின் அதிக வளர்ச்சி பெறும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனமாக மாறி உள்ளது.இதுவரை $72 மில்லியன்(280 கோடி) ரூபாய் கடனை 300,000 பெண்களுக்கு வழங்கி உள்ளது.ஓன வருடம் மட்டும் $50 மியன் கடனை வழங்கி உள்ளது.இந்தியாவின் மிக வறுமையான 11 மாநிலங்களில்(சட்டிஸ்கார்,ஜார்கண்ட், அந்திரா, ராஜஸ்தான்,ஒரிசா, ம.பி, உ.பி,,பீகார்) செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அடுத்த வருடம் 7 லட்சம் பயனாளிகளை இலக்காக வைத்திருக்கிறது.

பணக்காரர்களுக்கே கடன் தந்தால் பணம் திரும்ப வருவதில்லை.அப்படி இருக்க ஏழைகளுக்கு கடன் தந்தால் பணம் திரும்பி வரவா போகிறது என்று நினைக்கிறீர்களா?அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.விக்ரமின் நிறுவனத்தில் 98% கடன்கள் சொன்ன தேதியில் வசூலாகின்றனவாம்.

விக்ரமின் நிறுவனத்தில் கடனுதவி பெறுபவர்கள் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள்.அவர்களுக்கு சுமார் 5000 ரூபாய் அளவு கடனுதவி வழங்குகிறார் விக்ரம். கடன் பெறுபவ்ர்கள் அந்த கடனை ஆடு/கோழி வளர்த்தல், பழம்/காய்கறி வாங்கி விற்பது, மண்பானை செய்வது, கூடை முனைவது போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்களாம். ஆபத்துகாலங்களில் வட்டி இல்லாத கடன் கூட வழங்குகிறாராம் விக்ரம் அகூலா. அதுபோக கடனாளிகளுக்கு இன்சுரன்ஸ் வசதியும் செய்து தருகிறாராம். அதுபோக எஸ்.கே.எஸ் கல்விநிறுவனங்கள் மூலமாக பள்ளியிலிருந்து பாதியில் நின்ற பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியும் அளிக்கப்படுகிறதாம்.

இவரது சேவையை பாராட்டி டைம் பத்திரிக்கை இவரை "புதிய உலகை உருவாக்கும் நூறு சிற்பிகளுல் ஒருவர்" என்று கவ்ரவ்திருக்கிறது.

காசு,பணம், வசதி,ஆடம்பரம் என அனைத்தும் நிரம்பிய வாழ்வை உதறி விட்டு "நாடென்ன செய்தது எனக்கு?" என கேட்காமல் 'நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டதால் தான் கிட்டத்தட்ட 7 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு சொர்க்க வாசலை திறக்க விக்ரம் அகூலாவால் முடிந்திருக்கிறது.

No comments: