Tuesday

இழப்பு ......................இழப்பு ...........

இழப்பின் மறுபக்கம்
இழந்ததெல்லாம் திரும்பத் தா
இறைவா!
இழந்ததெல்லாம் திரும்பத் தாஎனக் கென்றேன்
இழந்த தெவை என இறைவன்கேட்டான்!
பலவும்இழந்திருக்கிறேன்,கணக்கில்லை
பட்டியல் ஒன்றிட்டுச்சொல்லவா
இயலும்?
கால மாற்றத்தில் இளமையைஇழந்தேன்
கோலம் மாறி என் அழகையும்இழந்தேன்
வயதாக ஆக உடல்நலமிழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும்தாஎன்றேன்.
அழகாகச் சிரித்தான் பரமன்
”கல்வி கற்றதால் அறியாமைஇழந்தாய்
உழைப்பின் பயனாய்வறுமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளைஇழந்தாய்
சொல்ல இன்னும் பல உண்டுஇதுபோல
தரட்டுமா அனைத்தையும்திரும்ப என்றான்.
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்றுஉணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில்இழப்பும் பேறும்
இணைந்ததை அறிந்தேன்இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான். -- படித்ததில் பிடித்தது

Friday

நிசப்தம் இணையதளத்துக்கு சுஜாதா இணைய விருது

! நிசப்தம்கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது நிசப்தம் இணையதளமானது சுஜாதா இணைய விருதைப் பெற்றுள்ளது. உயிர்மையும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா இணைய விருது விவரங்கள்: சுஜாதா இணையவிருது: வா.மணிகண்டன் வலைப்பதிவு: http://www.nisaptham.com/. சுஜாதா சிறுகதை விருது: அஜயன்பாலா, நூல்: அஜயன் பாலா சிறுகதைகள், சுஜாதா நாவல் விருது : தமிழ் மகன், நூல்: வனசாட்சி, சுஜாதா கவிதை விருது: மனோ.மோகன் நூல் பைத்தியக்காரியின்பட்டாம்பூச்சி, சுஜாதா உரை நடைவிருது (இரு நூல்களுக்கு வழங்கப்படுகிறது) .பிரபாகரன், நூல் குமரிக்கண்டமாசுமேரியமா?, ராஜு முருகன் நூல்: வட்டியும்முதலும் சுஜாதா சிற்றிதழ்விருது (இரு இதழ்களுக்கு வழங்கப்படுகிறது) இதழ்கள்: ஞானம், தி.ஞானசேகரன் ஆசிரியர், கருக்கல் எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
http://www.nisaptham.com/

Wednesday

உலகின் ஒரேயொரு நகரும் தீவு இதுதான் ..!


Schiermonnikoog நெதர்லாந்தில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, இது தனது இருப்பிடத்திலிருந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது,

புவியின் கண்டங்களும் சிறியதொரு நகர்வைக் காட்டுகின்றன, ஆனால் இந்த தீவின் நகர்வானது ஒப்பீட்டாளவில் வேகமாக இடம்பெறுகிறது, கடந்த 760 ஆண்டுகளில் 2 கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து விட்டதென்றால் பாருங்கள் ... அண்ணளவாக வருடத்திற்கு 2.6 மீட்டர்கள் நகர்கிறது.

இது பல ஆச்சிரியங்களை தோற்றுவித்தாலும் ஆய்வை மேற்கொண்டவர்கள் சில முடிவுகளை முன்வைத்தனர், உண்மையில் தீவு நகரவில்லை, ஒரு பக்க கரையோரம் நீரினால் சூழப்படும் நேரம் எதிர்க்கரையில் நீர்மட்டம் பின்னோக்கிச் செல்கிறது, இதனால் நிலப் பரப்பிற்கும் தீவுக்கும் இடையினான தூரம் வெறும் பார்வைக்கு மட்டும் வேறுபடுவதாக சொல்லப்படுகிறது

Thursday

நோயாளிக்கு ஒரு அட்வைஸ்

நோயாளிக்கு ஒரு அட்வைஸ் இன்னைக்கு இருக்கிற நிலைமையில் யார்ற்கு என்ன நோய் வரும் என்பது யார்க்கும் தெரியாது .
ஒரு தலைவலி வந்தா யாராவதுகிட்ட சொன்ன போதும் அட இந்த வயசில் ஏப்படி உனக்கு மட்டும் தலைவலி வருது என்னக்கு பொறு ஒண்ணுமில்லை 
அட உனக்கு மட்டும் ஏப்படி பல்வலி வருது  உனக்கு மட்டும் ஏப்படி சளி பிடிக்குது 
உனக்கு மட்டும் ஏப்படி சுகர் வருது அட பாவிகளா நோய் என்பது ஒவொரு உடம்புக்கு த்க்குந்தபடி வரும் இதல்லாம்  ஜீன்ஸ் (மரபணு )பண்ற வேலை அவன் உணவு சார்ந்த பழக்கம் இன்னும் நிறைய இருக்கு .

Friday

History of Telescope

தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது. 1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர்களும் இதன் வழி வந்தன.

18-ம் நூற்றாண்டில், கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர். நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார்.

கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார்.

ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார். இதே காலகட்டத்தில், பிரிட்டடிஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் “மைக்ரோகிராபியா” என்ற நூலை வெளியிட்டார்.

அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

MicrosoftOffice Vs Google Docs

ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

Wednesday

ஒரு யோகியவனை பற்றி !!!!!!!!!!!!!!!!!!!!1

கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர். 
நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், நிறைய வாசிக்க வேண்டும் என்ற அறிவுத் தேடலையும் குற்றமாக எந்த மனிதனாலும் கூற முடியாது. அந்த ஆர்வமே அப்பெண்ணிடம் மிகுதியாய் இருந்திருக்கிறது என்பதை அவருடன் பேசியதில் இருந்து உணர முடிகிறது. அப்படி இருக்க அவர் சந்தித்த பிரச்சனைதான் என்ன?