''மனித வணக்கம்'' - கமல்ஹாசன்
மனித வணக்கம்.தாயே,
என் தாயே!நான்உரித்த தோலே
அறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,
என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.
தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ
உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய்
இன்றுபுரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.
தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல்
நீஅச்சகம்தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள் வெவ்வேறு.
தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயேதுணை தேடிப் போனாயோ?மனைவி,
ஓ காதலி!நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்சாத்திரத்தின்
சூட்சமங்கள் புரியும் வரை.
மகனே, ஓ மகனே!என் விந்திட்ட விதையேசெடியே,
மரமே, காடேமறு பிறப்பேமரண செளகர்யமே, வாழ்!
மகளே, ஓ மகளே!நீயும் என் காதலியே
எனதம்மை போல ..எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?இல்லைகாதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்இவ்விடமும் அவ்விதமே.
பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளேஉனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்நீ துவைத்த துணிக் கடைகள்நிர்மூலமாகி விடும்நிர்வாணமே தங்கும்.
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத் தோன்றின்பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.ஆம்,நான் உன் வரியில் நான் தெரிவேன்.