Friday

திருமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

"எனக்கு மிகவும் பிடித்த செய்யுள்."

இறைவுணர்வு என்பதே அன்புணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும்செய்ய வேண்டும்.அருள்நெறி என்பது நெறியின் அன்பு நெறியின் அடியாக தோன்றுவதாகும்.எனவே தான் ''அருள் என்னும் அன்பு ஈன் குழுவி'' என்றார் வள்ளுவர்.உலக உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும்.அருள் நெறி நின்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமயவாழ்வு வாழ்கிறோம் எனில் அதுசமுதாய வாழ்வுடன் இணைந்தாக அமைய வேண்டும். "

No comments: