Saturday

திருமந்திரம்

"அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சு மடக்கில் அசேதன மாமேன்றிட்டு
அஞ்சு மடக்கா அறிவறிந் தேனே"

மனதை ஒருநிலை படுத்த ஐந்து புலன்களையும் அடக்க (கட்டுப்படுத்த) வேண்டும் என்று கூறுவர் அறிவு இல்லாதவர். புலன்கள் ஐந்தயும் அடக்கி வாழ்ந்து பிறகு இறந்தவரும் இவ்வுலகில் இல்லை. இப்படி இருக்க எவரேனும் புலன்களை அடக்க நினைத்தால் அது உடற்துன்பத்திற்கே (சேதம் ) கொண்டு செல்லும். ஆதலால் புலன்களை அடக்க நினைக்காமல் புலன்கள் ஊக்குவிக்கும் செயல்களை சீரமைத்து நல்லறிவு பெற வேண்டும்

No comments: