Saturday

கமல்ஹாசன்

''மனித வணக்கம்'' - கமல்ஹாசன்

மனித வணக்கம்.தாயே,

என் தாயே!நான்உரித்த தோலே

அறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,

என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ

உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய்

இன்றுபுரியாத வரியிருப்பின் கேள்!

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!

என் தகப்பனின் சாயல்

நீஅச்சகம்தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!

தோழி, தொலைந்தே போனாயேதுணை தேடிப் போனாயோ?மனைவி,

ஓ காதலி!நீ தாண்டாப் படியெல்லாம்

நான் தாண்டக் குமைந்திடுவாய்சாத்திரத்தின்

சூட்சமங்கள் புரியும் வரை.

மகனே, ஓ மகனே!என் விந்திட்ட விதையேசெடியே,

மரமே, காடேமறு பிறப்பேமரண செளகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!நீயும் என் காதலியே

எனதம்மை போல ..எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?இல்லைகாதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!

நீ செய்த நட்பெல்லாம்

நான் செய்த அன்பின் பலன்இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!

உன் ஆடையெனும் அகந்தையுடன்

எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.

நீ உடுத்தி நிற்கும் ஆடைகளேஉனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்நீ துவைத்த துணிக் கடைகள்நிர்மூலமாகி விடும்நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!

என் சமகால சகவாசி,வாசி!

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் எனத் தோன்றின்பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.ஆம்,நான் உன் வரியில் நான் தெரிவேன்.

No comments: