மந்திரத்து பொருளதனை சத்தியமாய் உரைத்தீரே
உந்திறத்தை கண்டவுடன் மெய்யதுவுஞ் சிலிர்கின்றேன்
தந்திரத்தால் அன்பதுவே சிவமென்றா லுண்மையல்ல
சந்திரத்து நாடியதில் களித்தநிலை தானன்பே
அன்பதனை உயிரிடத்து காட்டலுஞ் சிவமல்ல
என்பதுவு முருகிடினு பிடிதளரா பாசமது
துன்பத்திற் தளராது சிவனவனை நாடிவரின்
இன்பநிலை யதுவாமே அன்பதுவுஞ் சிவமாமே
No comments:
Post a Comment